20 Jan 2008

தமிழ்ப் பதிவு

2008க்கான புது வருடத் தீர்மானங்களில் ஒன்று தான் சுவடிப்பூக்கள் என்ற இந்தத் தமிழ் பதிவு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கையால் எழுதி நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.


மாதத்திற்கு ஒரு பக்கமாவது தமிழில் எழுத வேண்டும் என்பது முடிவு. ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்த பின் சுற்றியுள்ள நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதில் ஓர் ஆர்வம் எழுந்துள்ளது. தமிழிலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.



இதன் தொடர்ச்சியாக காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கியதும் பொங்கல் சமயத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நல்ல சில தமிழ்ச் சிறுகதைகளை படிக்க முடிந்ததும் புத்தாண்டுத் தீர்மானங்களை நடப்பிலாக்குவதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.


பார்க்கலாம்.

No comments: